Header Ads



சுதந்திரக் கட்சி அமைச்சர்களை, இணைத்துக்கொள்ள மாட்டோம் - கம்மன்பில

சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள முன்வந்தாலும் அவர்களை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுன பெற்றுள்ள வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் ​போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய பிரமாண்ட வெற்றியின் காரணமாக சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பலரும் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்து தகவல் அனுப்பியுள்ளார்கள்.

ஆனால் அவர்களில் யாரையும் தற்போதைக்கு இணைத்துக் கொள்ளப் போவதில்லை. அவ்வாறு இணைத்துக் கொண்டால் இதுவரை இணைந்து செயற்பட்டவர்களுக்கு பாரிய அநீதி இழைத்தது போலாகிவிடும்.

எதிர்வரும் மாதங்களில் அரசாங்கம் புதிய அரசியலமைப்பை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளது. அதனைத் தோற்கடிப்பதற்காக சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்தால் அந்த சந்தர்ப்பத்தில் அவர்களை கூட்டு எதிர்க்கட்சியில் இணைத்துக் கொள்வோம் என்றும் உதய கம்மன்பில தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.