Header Ads



சாகலவை கைவிட ரணில் மறுப்பு, யானைக்குள் மீண்டும் பனிப்போர்

கண்டி மாவட்டத்தைச் ​சேர்ந்த அமைச்சரொருவரின், அமைச்சுப் பதவியைப் பறித்து, மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரொருவருக்குக் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் செயற்பாட்டுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளாரெனவும்,  அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால், அந்தக் கட்சிக்குள் பனிப்போர் மூண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கண்டி மற்றும் மாத்தறை ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவரில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரின் விடயதானத்தையே இவ்வாறு மாற்றிக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அறியமுடிகின்றது.

அதில், மாத்தறையைச் சேர்ந்த சட்டம், ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர், தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளாரென, கடந்த14ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார்.

அவருக்கே, கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த, உயர்க்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்லவிடமிருந்து, நெடுஞ்சாலைகள் அமைச்சை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்தச் செயற்பாடுகளுக்கே, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனரென, அறியமுடிகின்றது.

No comments

Powered by Blogger.