Header Ads



கொள்ளுப்பிட்டியில் அரியவகை எறும்புண்ணி, சீன உணவகத்திலிருந்து மீட்பு

அழிந்து வரும் உயிரினமாக கருதி, பாதுகாக்கப்படவேண்டிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள எறும்புண்ணி (Pangolin)ஒன்று கொள்ளுப்பிட்டியில் உள்ள சீன உணவகம் ஒன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த உணவகத்தின் சமயலறையில் இருந்த குளிரூட்டிக்குள் இருந்தே இந்த எறும்புண்ணி இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.  

இந் நிலையில் இந்த உயிரினத்தை குளிரூட்டியில் வைத்திருந்த குறித்த உணவகத்தின் பிரதான சமையல்காரரான சீன பிரஜையையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சீன உணவகத்துக்கு அந்த எறும்பு உண்ணியை சீன சமயல் காரர் கொண்டுவருவதை அப்பகுதியில் இருந்த சிலர் கண்டுள்ள நிலையில், அவர்களால் 119 என்ற அவசர அழைப்பு இலக்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையிலேயே அந்த தகவலுக்கு அமைவாக குறித்த சீன உனவகத்தை முற்றுகையிட்ட பொலிஸார் எறும்புண்ணியை மீட்டுள்ளனர்.

4 அடி நீலமான இந்த எறும்புண்ணி, 6 கிலோ வரை எடை கொன்டது என தெரிவிக்கும் பொலிஸார் அந்த உயிரினத்தை வனஜீவரசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர். கைதான சீனப் பிரஜையை கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

(எம்.எப்.எம்.பஸீர்)

1 comment:

Powered by Blogger.