Header Ads



நான் மஹிந்­தவை காப்­பாற்­ற­வில்லை, ஆனால் நிறைய தொடர்புள்ளது - ரணில்

முன்னாள் ஜனா­தி­ப­தியின் பிர­ஜா­வு­ரி­மையை பறிப்­பது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் எந்­த­வொரு பேச்­சு­வார்த்­தையும் நடத்­த­வில்லை. அது தொடர்பில் பாரா­ளு­மன்­றம்தான் தீர்­மா­னிக்க வேண்டும். எனினும் அர­சாங்­கமும் இது தொடர்பில் எந்­த­வொரு தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கேச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வியில் தெரி­வித்தார். அத்­துடன் முன்னாள் ஜனா­தி­ப­தி­யுடன் எனக்கு எந்­த­வொரு டீலும் இல்லை. மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் எனக்கும் டீல் இருப்­ப­தாக  கூறு­வது ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

உள்­ளூ­ராட்சி தேர்­தலை அடிப்­ப­டை­யாக கொண்டு சம­கால அர­சியல் நில­வரம் குறித்து வழங்­கிய விசேட செவ்­வியின் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­த­தா­வது,

பாரிய ஊழல் மோசடி தொடர்­பான ஆணைக்­கு­ழு­வினால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் சிவில் உரிமை மற்றும் பிரா­ஜ­வு­ரி­மையை நீக்க வேண்டும் என்றும் அது வாழ்நாள் முழு­வதும் பாதிப்பு செலுத்தும் வகையில் அர­சி­ய­ல­மைப்­பினை திருத்த வேண்டும் என பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த பரிந்­து­ரைகள் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் எந்­த­வொரு பேச்­சு­வார்த்­தையும் நடத்­த­வில்லை. பாரா­ளு­மன்­றம்தான் தீர்­மா­னிக்க வேண்டும். எனினும் அர­சாங்­கமும் இது தொடர்பில் எந்­த­வொரு தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை. 

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­ப­தி­யுடன் எனக்கு எந்­த­வொரு டீலும் இல்லை. முன்னாள் ஜனா­தி­ப­திக்கு மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்­கும டீல் இருப்­ப­தாக கூறு­வது ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது. மஹிந்த ராஜ­ப­க்ஷவை நாம் ஜனா­தி­ப­தி­யாக்க முனை­ய­வில்லை. அப்­படி இருக்கும் போது எமக்கு அவ­ருடன் டீல் வைப்­பதில் பிர­யோ­சனம் இல்லை.

எனினும் அர­சி­ய­லுக்கு அப்பால் எனக்கும் அவ­ருக்கும் நிறைய தொடர்­புகள் உள்­ளன. என்­றாலும் பொது­வாக அனைத்து அர­சி­யல்­வா­தி­க­ளுடன் நான் தொடர்பு வைத்­துக்­கொள்­வது வழக்­க­மாகும். 

முன்­னைய ஆட்­சியின் மோச­டி­களை விசா­ரணை செய்­வ­தற்கு உரிய நட­வ­டிக்கை எடுப்போம். மேலும் வழக்­கு­களை துரி­தப்­ப­டுத்த விசேட மேல்­நீ­தி­மன்­ற­மொன்றை அமைப்போம்.

ஜக்­கிய தேசியக் கட்­சிக்கு விமர்­சனம் செய்­வ­தனை நாட­க­மென நான் கூற­வில்லை. எனினும் தேர்தல் என்ற படியினால் தமது கட்சியின் தனித்துவத்தை பாதுகாக்க அனைவரும் முயற்சி செய்வார்கள்.

சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியை தாக்கி பேசட்டும். அதற்காக  நாம் பதிலடி கொடுக்கமாட்டோம். அவ்வாறு செய்வதில் பிரயோசனமும் கிடையாது 

No comments

Powered by Blogger.