எதிர்கட்சி பதவியே எமக்கு வேண்டும் - புதிய பிரதமரை ரணிலும், மைத்திரியும் தீர்மானிக்கட்டும்
எதிர்கட்சி தலைவர் பதவியை தங்களுக்கு வழங்குமாறு கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு வருகை தந்த போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
புதிய பிரதமரை நியமிப்பதா இல்லையா என்று ஐக்கிய தேசிய கட்சியும் ஜனாதிபதி தரப்பினருமே தீர்மானிக்க வேண்டும்.
எனினும் எதிர்கட்சி தலைவர் பதவி தங்களுக்கு வேண்டும் என்றே நாங்கள் கோருகின்றோம் எனவும் மகிந்த குறிப்பிட்டார்.
அத்துடன் தற்போதைய பிரதமரை, ஜனாதிபதியே பாதுகாத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment