Header Ads



நான் ஒரு, சமாதானப் பறவை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில்விக்ரமசிங்கவிற்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்பத்தும் முயற்சியில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் நிலவி வரும் முரண்பாடுகளைகளையும் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க இருவருக்கும் இடையில் தாம் ஒர் சமாதானப் பறவையாக செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் செயற்படுவது தொடர்பில் சில தரப்பினர் ஜனாதிபதிக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் தான் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.