Header Ads



ஜெனீவா தொடர் ஆரம்பம், முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லை, சிங்கள - தமிழ் சமூகங்கள் பங்கேற்பு


ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் இன்று திங்­கட்­கி­ழமை -26- ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இலங்கை விவ­காரம்  தொடர்பில் ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசென்  கடும் அழுத்­தங்­களை  பிர­யோ­கிப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

மனித உரிமை பேர­வையின்  தலைவர் தலை­மையில் நடை­பெறும் இந்த   37 ஆவது கூட்டத் தொடரில்   நிலையில்   இலங்கை மனித  உரிமை நிலை­வரம் உள்­ளிட்ட  பல்­வேறு நாடு­களின்   மனித உரிமை விவ­கா­ரங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன்   பிரே­ர­ணை­களும் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளன. 

விசே­ட­மாக எதிர்­வரும் மார்ச் மாதம்  16 ஆம் திகதி இலங்கை குறித்த புகோள காலக்­கி­ரம மீளாய்வு விவாதம் நடை­பெ­ற­வுள்ள நிலையில்  எதிர்­வரும் 21 ஆம் திகதி இலங்கை குறித்த  பிர­தான விவாதம் இடம்­பெ­ற­வுள்­ளது.   

 இதே­வேளை இலங்கை ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்த மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை வெ ளியா­கி­யுள்­ளது.  இதில் பல்­வேறு விட­யங்­களை அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  குறிப்­பாக இலங்கை விவ­கா­ரத்தில்  சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை  பயன்­ப­டுத்த முடி­யுமா என்­பது குறித்து ஆரா­யு­மாறு ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­க­ளிடம் செய்ட் அல் ஹுசென்  அந்த அறிக்­கையில் கூறி­யுள்ளார்.  

இன்று  நடை­பெ­ற­வுள்ள முத­லா­வது அமர்வில்   ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ுஹசைன்   ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம்  அன்­டோ­னியோ கட்ரஸ் உள்­ளிட்ட தரப்­பினர்  உரை­யாற்­ற­வுள்­ளனர்.  

முத­லா­வது அமர்வில் உரை­யாற்­ற­வுள்ள   ஐ.நா. மனித உரிமை  ஆணை­யாளர் செயிட் அல் ுஹசைன் இலங்கை தொடர்­பான தனது  நிலைப்­பாட்டை அறி­விக்­க­வுள்ளார்.  இதன்­போது  தனது அறிக்­கையில் உள்ள விட­யங்­களை குறிப்­பிட்டுக் கூறுவார் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  

இதே­வேளை இம்­முறை  கூட்டத் தொடரில்  பாதிக்­கப்­பட்ட மக்­களின் சார்பில்  மக்கள் பிர­தி­நி­திகள்  கலந்­து­கொண்டு  உரை­யாற்­ற­வுள்­ளனர்.  குறிப்­பாக  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  தமிழ்­தே­சிய மக்கள் முன்­னணி, மற்றும்  பல்­வேறு அர­சியல் கட்­சி­களின் மக்கள் பிர­தி­நி­திகள்  ஜெனி­வாவில் முகா­மிட்டு  பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலைமை தொடர்பில்  உரை­யாற்­ற­வுள்­ளனர்.

அது­மட்­டு­மன்றி  தென்­னி­லங்­கையின் சிவில் சமூக   பிர­தி­நி­தி­களும்  இம்­முறை கூட்டத் தொடரில் கலந்­து­கொண்டு   ஜெனிவா பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பது தொடர்பில்  சர்­வ­தேச சமூ­கத்தை வலி­யு­றுத்­த­வுள்­ளனர். 

அதே­போன்று தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து  இரா­ணு­வத்தை பாது­காக்க வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள்   ஜெனி­வாவில் முகா­மிட்டு   விளக்­கங்­களை அளிக்­க­வுள்­ளனர். 

மேலும் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மற்றும்  ஐ.நா. மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடுகள் இலங்கை தொடர்­பாக ஜெனிவா வளா­கத்தில் இம்­மு­றையும் பல்­வேறு  உபக்­கு­ழுக்­கூட்­டங்­களை நடத்­த­வுள்­ளன.

இது இவ்­வாறு இருக்க  வௌிவி­வ­கார அமைச்சர்  தலை­மையில் அமைச்சின் உயர் அதி­கா­ரி­களும்  சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களும் ஜெனிவா நோக்கி செல்­ல­வுள்­ளனர்.   அதா­வது எதிர்­வரும் 21 ஆம் திகதி  நடை­பெறும்  விவா­தத்­தின்­போது இலங்­கையின் சார்பில்  வெ ளிவி­வ­கார அமைச்சர்   பங்­கேற்று  உரை­யாற்­ற­வுள்ளார். 

இதேவேளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பயங்கரவாதத்தை ஒடுக்கும் போது  அடிப்படை சுதந்திரம் மற்றும்  மனித உரிமையை  பாதுகாப்பது தொடர்பான  ஐ.நா.வின் விசேட நிபுணர்  பென் எமர்சன்    இம்முறை  ஜெனிவா  மனித உரிமை பேரவையில்    தனது இலங்கை விஜயம் குறித்த அறிக்கையையே  தாக்கல்  செய்யவுள்ளார்.

No comments

Powered by Blogger.