Header Ads



கைது செய்யப்படுவீர் என, நீதிமன்றம் நசீர் அஹ்மட்டுக்கு எச்சரிக்கை


முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமான காணி தொடர்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை கடந்தவாரம் நீதிமன்றத்தில எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது முன்னாள் கிழக்கு மாகாண  முதலமைச்சர் CID க்கு வாக்குமூலம் வழங்கியதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வாக்கு மூலத்தில் தான் முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமான எந்த காணியையும் விற்கவோ அல்லது வாங்கவோ இல்லை என  நசீர் அஹ்மட் சுட்டிக்காட்டியதாக CID பொலிசார் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்போது குறிக்கிட்டுள்ள மூத்த சட்டத்தரணியும், முஸ்லிம் சமூக ஆர்வலருமான சிராஸ் நூர்தீன், தாருசலாத்திற்குரிய காணியை கையகப்படுத்தியமை மற்றும் அதனை விற்றமை உள்ளிட்டவைகளுக்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என நீதிபதியின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேலும் தான் குறித்த காணியை வாங்கவில்லை என வாதிடும் நசீர் அஹ்மட், எப்படி அந்தக் காணியை விற்றுள்ளார் எனவும் கேள்வி கேட்டுள்ளதுடன், CID பொலிசாருக்கு நசீர் அஹ்மட் பொய்  சொல்வதாகவும் வாதிட்டுள்ளார்.

இவற்றை செவிமடுத்த நீதிபதி, நசீர் அஹ்மத்திடம் மீண்டும் CID குறுக்கு விசாரணை நடத்துமாறும்  அதில் நசீர் அஹ்மட் பொய் சொன்னது நிரூபிக்கப்படின் அவர் கைது செய்யப்படுவாரென  எச்சரித்துள்ளார்.

அதேவேளை குறித்த வழக்கு விசாரணையானது ஒத்திவைக்கப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


3 comments:

  1. மூத்த சட்டத்தரணி சகோ.நூர்தீன் அவர்கள் கூறுவது சரியாக இருக்கும் என நம்பமுடியும். ஏனெனில் நஸீர் அஹ்மத் வாய் திறந்தால் பொய்யும் புரட்டும் போலி கௌவரமும் தேடுபவர் என்பது அவருடைய முதலமைச்சர் வேடத்தில் நன்கு தெரிந்தது. எனவே முதலில் இவரை சிறையில் அடைத்து விசாரணையை மேற் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. I heard this premises belongs to Sri Lankan Muslim ( SLMC) not Nazeer Ahamed personal property but he is using exclusively as an owner. Brother Siraz well done continue to get the property for Muslim community.

    ReplyDelete
  3. MUSLIM "MUNAAFIKK" POLITICIANS ARE BEING EXPOSED BY THE GRACE OF GOD ALLMIGHTY ALLAH>
    THERE IS A BIG CULPRIT FROM THE WANNI WHO WILL ALSO BE PUNISHED BY GOD ALLMIGHTY ALLAH SOON, Insha Allah.
    There is a Tamil saying - KINGS WILL PUNISH INSTANTLY, BUT GOD WILL WAIT A BIT AND PUNISH" (Arasan andru arupaan, deivam ninarukkum). This will happen to some of the deceptive Muslim politicians very soon and let us all Muslims pray God AllMighty Allah for that. The Sri Lankan Muslims need a "NEW POLITICAL FORCE" of "Righteous" Politicians, Insha Allah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.