Header Ads



முஸ்லிம்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பு...!

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி சட்டத்தின் 17ஆவது திருத்தச்சட்டப்படி மாகாண சபைகளின் எல்லைகளை வகுப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த எல்லை நிர்ணயக் குழு அதன் அறிக்கையை மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு திங்களன்று கையளித்தது. 

மாகாண சபைத் தேர்தல் முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றுப்படி நாட்டில் 222 தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 222 தொகுதிகளுக்கு 50சதவீதம் தொகுதி முறைப்படியும் 50 சதவீதம் விகிதாசார முறைப்படியும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. 

கலாநிதி தவலிங்கம் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த ஐவர் கொண்ட குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பாக சர்வகட்சி மகாநாடொன்றைக் கூட்டி ஆராயப்பட்ட பின்பே அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 

எல்லை நிர்ணய ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லா புறம்பாக ஓர் அறிக்கையை சமர்ப்பித்து இந்த அறிக்கையின் சிபாரிசுகளினால் முஸ்லிம்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பு பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 

எல்லை நிர்ணய ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி நாட்டில் தொகுதி மட்டத்தில் 13 முஸ்லிம்களே தெரிவாகும் வாய்ப்பு இருப்பதாக பேராசிரியர் ஹஸ்புல்லா சுட்டிக்காட்டியுள்ளார். 

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க கூடிய வகையில் பேராசிரியர் ஹஸ்புல்லா பல சிபாரிசுகளை முன்வைத்த போதும் எல்லை நிர்ணயக்குழுவின் பெரும்பான்மையினர் அதற்கு ஆதரவு வழங்காததன் காரணமாகவே அவர் தனியாக STRONG RESERVATION என்ற தலைப்பில் புறம்பான அறிக்கை ஒன்றை அறிக்கையுடன் இணைத்து வழங்கியுள்ளார். 

இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட முன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அறிக்கையை விரிவாக ஆராய்ந்து முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உள்ளூராட்சித் தேர்தல் முறையில் இடம்பெற்ற தவறு போன்று மாகாணசபை தேர்தல் முறையிலும் தவறு ஏற்பட இடமளித்தால் மாகாண சபைகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைய இடமுண்டு. 

விகிதாசாரத் தேர்தல் முறையில் கடந்த காலத்தில் மாகாண சபையில் முஸ்லிம்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப நாட்டின் அநேக மாகாண சபைகளில் பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தது. 

தவலிங்கம் அறிக்கை அப்படியே அமுல்நடத்தப்பட்டால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம். 

எனவே இது குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி ஒன்றாக செயற்பட்டு மாகாண சபைகளில் முஸ்லிம்களது விகிதாசாரத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைப்பதனை உறுதி செய்ய முன்வர வேண்டும்.

நவமணி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்

1 comment:

  1. What is the benefit if you all barking now......? nothing will happen by who wrote about this at now...Navamani or kulamani.......etc!!

    SLTJ warned about these all around the island...village by vilage...town by town... no one want to listen this because they are "small boys"....in your all view...
    Now you people start to think like idiots...?
    No need to change any frame of law..now...
    All of your dirty minds should be cleaned thn only you all will start to think about the true and facts...Bus has left....!

    ReplyDelete

Powered by Blogger.