ரணில் விலகி பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் - நாமல்
ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலகவேண்டும் என்றும், மக்களின் விருப்பத்திற்கு தலைசாய்த்து நாடாளுமன்றத்தை கலைத்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“ நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு தகவல் ஒன்றை வழங்கியுள்ளனர். இந்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை மக்கள் வெறுத்துள்ளனர். வாழ்க்கைச் செலவு, நாட்டை பிரித்தல், நாட்டின் தேசிய வளங்களை விற்றல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குழைத்தல் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளுக்கும் எதிராக நாட்டு மக்கள் மொட்டுவுடன் ஒன்றிணைந்துள்ளதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment