Header Ads



ஹக்கீம் மீது, அநுரகுமார தாக்குதல்


மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக எதிர்வரும் வாரத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறலாம் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜே.வி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

கோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளையிடுகின்ற ஆட்சியாளர்களே உள்ளனர். அவர்களிடமிருந்து நாட்டை மீட்காதவரை இலங்கைக்கு எதிர்காலம் ஒன்றை உருவாக்க முடியாது.

ஹக்கீம் போன்றவர்கள் தரகரை போன்றவர். மக்களிடம் வாக்குகளை பெற்றுக்கொண்டு, ரணிலிடமும் மகிந்தவிடமும் விற்பனை செய்கின்றார்.

தேர்தல் ஒன்று வருகின்றபோது இரு தரப்புக்களுக்கு இடையில் இருந்துகொண்டு தமக்கான லாபத்தை பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் இடம்பெறலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. Its true. Thank you for saying in public.

    ReplyDelete
  2. Well said, well said bro....

    ReplyDelete
  3. யதார்த்தமும், உண்மையும் பொறுப்புடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிந்திப்பார்களா முஸ்லிம்கள்.

    ReplyDelete
  4. சதி வேலைகளுக்கு ஹக்கீம் தரகராக இருப்பது மிகவும் ஆபத்தானது .

    ReplyDelete

Powered by Blogger.