Header Ads



பொன்சேக்கா பற்றி இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை - ராஜித

சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ​போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், 

சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்குவது தொடர்பாக இன்னும் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றது.

எனினும் ஒருதரப்பினர் அதனை ஆதரிக்கும் நிலையில் இன்னொரு தரப்பினர் அதனைக் கடுமையாக எதிர்க்கின்றனர். அதன் காரணமாக இந்த விடயம் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

ஆனாலும் இன்னும் ஒருவாரத்துக்குள் சட்டம், ஒழுங்கு அமைச்சு வேறொரு அமைச்சருக்கு உறுதியாக கையளிக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.