Header Ads



சுஜீவ - மைத்திரி தனியாக சந்திப்பு

மகிந்த ராஜபக்சவின் கூட்டு எதிரணியின் ஆதரவுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ள அதேவேளை, நாடாளுமன்றத்தில் ஐதேக அரசுக்குப் பெரும்பான்மை பலம் உள்ளது என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், ஐதேகவைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து அவரது தலைமைத்துவத்தின் கீ்ழ் செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக அவர் ஐதேக தலைமைக்கு அறிவிக்கவில்லை. அவர் கட்சி தாவலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.


No comments

Powered by Blogger.