Header Ads



நான் கட்சி, மாறப்போவதாக வதந்தி - ஹர்ச டி சில்வா

சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டினால் ஐ.தே.க. அரசாங்கமொன்றை அமைக்க தயாராக இருப்பதாக ஹர்ச டி சில்வா எச்சரித்துள்ளார்.

பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா இது தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பதிந்துள்ளார்.

குறித்த தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நான் கட்சி தாவி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கொள்ளப் போவதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றது.

ஆயினும் நான் தொடர்ந்தும் ஐ.தே.க.வுடனேயே இருக்கின்றேன். எந்தக் கட்டத்திலும் கட்சி மாறப்போவதில்லை.

அதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றை அமைக்கவும் நாங்கள் முயற்சிகளை முன்னெடுப்பதில் தீவிரமாக இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.