Header Ads



முஸ்லிம்­களை எம்­மி­ட­மி­ருந்து தூர விலக்­கி­யது, யார் என்­பது நன்­றா­கவே தெரியும் - மஹிந்த

மஹிந்த ராஜபக்ஸ் தமிழ் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியின் ஒரு பகுதி கீழ்வருமாறு,

Q :2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்­குகள் ஏன் உங்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை? 

A: இந்த நாட்டு மக்­களின் தேவைக்கு அப்பால் சர்­வ­தேச தேவை­க­ளுக்கு அமை­வா­கவே இலங்­கையில் இனங்­களை அடிப்­ப­டை­யா­கக் ­­கொண்ட ஆயுத மோதல்கள் உரு­வா­கின. இந்த நாட்டை பிரிப்­பதே அவர்­களின் நோக்­க­மாக இருந்­தது. ஆனால், அந்த முயற்­சியை யுத்­தத்தின் மூலம் நான் முடித்து வைத்தேன். எனினும் இன­வாத சக்­திகள் நான் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான ஒருவன் என்ற ஒரு பிர­மையை உரு­வாக்­கின. எனினும் யுத்தம் முடிந்­ததன் பின்னர் எனது அர­சாங்கம் வடக்கு, கிழக்கை கட்­டி­யெ­ழுப்ப எவ்­வ­ளவு வேலைகள் செய்­தது தெரி­யுமா? தெற்கை விட வடக்­குக்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுத்தேன். நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து மூன்று வரு­டங்கள் கடந்து விட்­டன. இந்த நல்­லாட்சி அர­சாங்கம் வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்­காக என்ன செய்­தது? தமிழ் கூட்­ட­மைப்பு இந்த நாட்டின் எதிர்க்­கட்­சி­யாக உள்­ளது. அவர்கள் கடந்த மூன்று வரு­டத்தில் தம் மக்­க­ளுக்­காக என்ன செய்­தனர் தமிழ் அர­சியல் கட்­சிகள் எப்­போ­துமே மக்­களை ஏமாற்­று­வதையே  செய்­து­வந்­துள்­ளன.

கவ­லையை விற்று வரப்­பி­ர­சா­தங்கள் பெற்­ற­தையே அவைகள் செய்­தன. தெற்கு மக்­க­ளைப்­போன்று வடக்கு, கிழக்கு மக்­களை பொரு­ளா­தார ரீதி­யாக பலப்­ப­டுத்­தவே நான் முயற்­சித்தேன். அதைத்தான் நான் செய்ய வேண்டும்.முஸ்லிம் மக்­களை எம்­மி­ட­மி­ருந்து தூர விலக்­கி­யது யார் என்­பது இன்று நன்­றா­கவே தெரியும். இவ்­வாறு தற்­கா­லிக அர­சியல் சுய­லா­பத்­திற்­காக இன ரீதி­யாக மோதல்­களை ஏற்­ப­டுத்­து­வது நீண்ட காலத்தில் நாட்­டுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும். 

1 comment:

  1. தத்துவங்கள் பிறப்பது போதையின் உச்ச கட்டத்திலா அல்லது ஆழ்ந்த நித்திரையிலா என்பதை புரிந்து கொள்வது சிரமமாக இ்ருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.