Header Ads



தலைவரும், செயலாளரும் ஒருவரே

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயற்குழுவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைவாக இதுவரை காலமும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செயற்பட்டு வந்த பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதுடன், இ.தொ.காவின் தற்போதையத் தலைவராகவும் செயலாளராகவும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராக மத்திய மாகாண சபை அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைத் தொழிலளார் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடல், கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழில்நுட்பக் கல்லூரியான சீ.எல்.எப்பில், இன்றுக் காலை இடம்பெற்றது. இதன்போதே, இ.தொ.காவின் செயற்குழுவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் காங்கிரஸின் தலைவராக செயற்பட்டு வந்த பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, தான் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதேவேளை அவருக்கு காங்கிரஸின் போசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.