Header Ads



அரசு மீதான தமது எதிர்ப்பை, மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் - சந்திரிக்கா

அரசாங்கத்தின் மீதான தமது எதிர்ப்பை உள்ளுராட்சி மன்ற தேர்தலின் ஊடாக மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

வியங்கொடை பிரதேசத்தில் இன்று -23- இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுத்து வரும் சில வேலைத்திட்டங்களை ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன் காரணமாகவே சிலர் வெற்றியும், சிலர் தோல்வியும் பெற்றனர்.

அடுத்த தேர்தலில், அவற்றுள் மாற்றங்கள் ஏற்படும் எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.