இழுபறி நிலை தணியுமா..?
உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் இலங்கை அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலை இன்னும் ஓய்ந்ததாக இல்லை. அமைச்சரவை மாற்றத்துடன் நல்லாட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் இழுபறி நிலை ஓரளவு தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூடுதலான சபைகளை மஹிந்த சார்பு அணி கைப்பற்றியதோடு அரசியல் அரங்கும் சூடு பிடித்தது. தேசிய அரசாங்கத்தில் இணைந்துள்ள இரு பிரதான கட்சிகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில் தோல்விக்கு காரணம் மறு தரப்பே என இருதரப்பும் மாறி மாறி அடுத்த தரப்பின் மீது குற்றஞ்சாட்ட ஆரம்பித்திருந்தன தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்கள் கடந்தும் இன்னும் அரசியல் குழப்ப நிலை ஓய்ந்ததாக இல்லை. ஆரம்பத்தில் ஆட்சி மாற்றம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. அடுத்து பிரதமர் மாற்றம் பற்றி பேச்சடிபட்டது.இறுதியாக இந்த சர்ச்சை அமைச்சரவை மாற்றத்தில் வந்து முடிந்துள்ளது.
கிராம ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தலாக இருந்தாலும் அதனை ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக மாற்றியது மஹிந்த சார்பு அணியும் முன்னாள் ஜனாதிபதியும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மஹிந்த தரப்பு வெற்றி கண்டிருந்த நிலையிலும் சுதந்திரக் கட்சி சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரை முன்னாள் ஜனாதிபதி தூண்டிவிட்டதாலே சுதந்திரக் கட்சி அரசாங்கம் மற்றும் தனி ஐ.தே.க அரசாங்கம் என்ற பேச்செல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது.
தனியான ஐ.ம.சு.மு அரசாங்கம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் சு.க அமைச்சர்கள், மஹிந்த ஆதரவு அணி எம்.பிகளிடையே பேச்சு நடந்தது. ஜனாதிபதியும் சு.க அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் பேச்சு நடத்தினார்கள்.மறுபக்கம் பிரதமர் தலைமையில் ஐ.தே.க அமைச்சர்கள், எம்.பிகள் இடையிலான பேச்சுக்கள் பல சுற்றுக்கள் நடந்தன. ஐ.ம.சு.மு அரசா ஐ.தே.க அரசா உருவாகும் என முழு நாடும் விழிப்போடு காத்திருந்தது.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவு வந்தால் இறுதியில் விவாகரத்து நடந்து கணவன் வேறு திருமணம் செய்வார். அல்லது மனைவி வேறு மணம் செய்வார்.இங்கும் இப்படி தான் நடந்து இறுதியில் பிள்ளைகளுக்காக சேர்ந்தே இருப்பது என்று முடிவாவது போல நல்லாட்சியும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
இது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது தான் என சில தரப்பினர் சாடுகையில் எதிர்ப்பை சமாளிப்பதற்காக மக்களின் கவனத்தை திசை திருப்பும் நாடகம் இது என மற்றொரு தரப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.
Post a Comment