Header Ads



மகிந்தவினால் வெற்றிபெற முடியாது - ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் இதனை எடுத்து காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியால் நேரடியாக பெரிய தேர்தல் ஒன்றுக்கு சென்று வெற்றியீட்ட முடியாது.

மகிந்த ராஜபக்சவின் பிரிதிநிதி ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய அளவிற்கு வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாது. நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் இதனை காட்டியிருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.