Header Ads



கொழும்பு மாநகர சபை அமர்வை, நடத்த இடமில்லை


கொழும்பு மாநகர சபையின் அமர்வை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக மாநகர சபை ஆணையாளர் அனுர தெரிவித்துள்ளார்.

“கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 119 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகர சபை வளாகத்துக்குள் சபை அமர்வுகளை நடத்துவதற்குப் போதிய இடவசதி இல்லை.

எனவே, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தை வாடகைக்குப் பெற்று அமர்வுகளை நடத்துவது தொடர்பாக ஆராயப்படுகிறது.

இது ஒரு தெரிவே தவிர, இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.