சிங்களவர்களை நோகடித்து, சிங்களவர்களை புறந்தள்ள முயற்சித்தால்...?
சிங்களவர்கள் முதல் முறையாக கட்சி, வர்ணங்களை புறந்தள்ளி விட்டு இனம் மற்றும் தாய் நாட்டை முன்னிறுத்தி தேர்தல் வாக்களித்துள்ளதாகவும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது சிங்கள அரசியல் பயணத்தில் மிகவும் முக்கியமான திருப்புமுனை எனவும் அவர் கூறியுள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில் இன்று -12- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மட்டுமல்ல, எதிர்காலத்தில் ஆட்சியமைக்கும் அரசாங்கங்கள், சிங்களவர்களை நோகடித்து, சிங்களவர்களை புறந்தள்ள முயற்சித்தால், அந்த அரசாங்கங்களுக்கு தவறிப் போகும் என்பதை சிங்களவர்கள் முழு உலகத்திற்கும் உரத்து கூறியுள்ளனர் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
Thirantuttaaaanya vaaya... ini eathotho visangalai kakkuvaangual
ReplyDelete