இலங்கையர்களுக்கு, குவைத்தின் மகிழ்ச்சியான தகவல்
குவைட்டில் துறைச் சார்ந்த நிபுணர்களுக்கான தொழில்வாய்ப்புகளை இலங்கையர்கள் அதிகளவில் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
அல் அன்பா டெய்லி என்ற பத்திரிகை அந்த நாட்டின் சுகாதார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
குவைட் வாசிகள் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு 2 ஆயிரத்து 140 தொழில் வாய்ப்புகளை உருவாக்குமாறு குவைட் சுகாதார அமைச்சு அந்த நாட்டின் சிவில் சேவைகள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.
அதன்படி, தாதியர்கள், வைத்தியர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் ஆகிய துறைசார் நிபுணர்கள் விரைவில் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.
இதன்போது இலங்கை, சிரியா, பங்களாதேஸ், இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment