Header Ads



அடுத்துவரும் சில நாட்களில், அரசாங்கத்தில் பாரிய மாற்றங்கள்

தற்போதைய அரசாங்கத்தில் பாரிய மாற்றங்கள் பல அடுத்து வரும் சில நாட்களில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார். 

மக்களுக்கு அதிக நிவாரணம் கிடைக்கின்ற வகையில் அந்த மாற்றங்களை செய்யவுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் சுட்டிக்காட்டியுள்ளார். 

கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

150 உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரம் பெற்று ஆட்சியமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கபீர் இதன்போது கூறினார்.

No comments

Powered by Blogger.