தேசிய அரசிலிருந்து சு.க. விலகவில்லை - பொய் சொன்ன அமரவீர
ஜனாதிபதியுடன் எதிர்காலத்திலும் தொடர்ந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதையை அரசில் நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபாதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள், ஜனாதிபதி செயலகத்தில் இன்று -19 சந்தித்தனர்.
எனினும் சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர நேற்று இரவு, ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை கையளித்தாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் அவ்வாறான ஒரு கடிதம் அனுப்பப்படவில்லை Hiru செய்தி பிரிவிற்கு கருத்து தெரிவித்த சுதந்திர கூட்டமைப்பின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார்.
Post a Comment