Header Ads



பெற்றோலுக்கு தட்டுபாடில்லை, மக்களே ஏமாறாதீர்கள்

எதிர்வரும் நாட்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொய்யான தகவல்களை சிலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பிக் கொண்டிருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. 

தற்போது நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென்றும், எரிபொருள் விநியோகம் எதுவித பாதுப்பும் இன்று இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களை குழப்பி நாட்டில் பெற்றோல் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு சிலர் எடுக்கும் இந்த முயற்சிகளுக்கு எமாற வேண்டாம் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.