Header Ads



‘‘இலங்கை வீரர்­க­ளி­ட­மி­ருந்து, இன்னும் அதி­க­மாக எதிர்­பார்க்­கின்றேன்"

பங்­க­ளா­தே­ஷுக்­கான கிரிக்கெட் சுற்றுப் பய­ணத்­தின்­போது மூவ­கை­யான சர்­வ­தேச கிரிக்கெட் தொடர்­களில் பங்­கு­பற்­றிய இலங்கை, அவை அனைத்­திலும் வெற்­றி­பெற்­றது. இந்த வெற்­றி­யா­னது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­று­ந­ராக பத­வி­யேற்ற சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­வுக்கு வெற்­றி­க­ர­மான ஆரம்­ப­மாக அமைந்­தது.

எனினும் இலங்கை கிரிக்கெட் வீரர்­க­ளிடம் இருந்து இன்னும் அதி­க­மாக எதிர்­பார்ப்­ப­தா­கவும் இதனை விட சிறந்த ஆற்­றல்­களை அவர்­களால் வெளிப்­ப­டுத்த முடியும் என நம்­பு­வ­தா­கவும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் பேசிய சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க தெரி­வித்தார்.

ஏஞ்­சலோ மெத்யூஸ் உபா­தைக்­குள்­ளா­னதன் கார­ண­மாக மூவகை சர்­வ­தேச தொடர்­க­ளிலும் தினேஷ் சந்­திமால் அணித் தலை­வ­ராக செயற்­பட்­ட­துடன் அவ­ரது தலை­மையில் இலங்கை அணி அபார வெற்­றி­யீட்­டி­யது.

பங்­க­ளாதேஷ், ஸிம்­பாப்வே ஆகிய நாடு­களும் பங்­கு­பற்­றிய மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் தொடரில் இலங்கை சம்­பி­ய­னா­ன­துடன் பங்­க­ளா­தே­ஷு­ட­னான இரு­த­ரப்பு டெஸ்ட் தொடரில் 1 க்கு 0 எனவும் சர்­வ­தேச இரு­பது 20 தொடரில் 2 க்கு 0 எனவும் வெற்­றி­யீட்­டி­யது.

இந்த வெற்­றி­க­ளுடன் திங்­க­ளன்று நாடு திரும்­பிய இலங்கை அணி­யி­ன­ருக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தில் சிறந்த வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

இந்த வர­வேற்­பின்­போது ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் பேசிய தலைமைப் பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க, ‘‘இலங்கை வீரர்­க­ளி­ட­மி­ருந்து இன்னும் அதி­க­மாக எதிர்­பார்க்­கின்றேன். அத்­துடன் அவர்­களால் இதனை விட சிறந்த ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்த முடியும் என நம்­பு­கின்றேன்’’ என்றார்.

‘‘சிறந்த புரிந்­து­ணர்­வு­டன்­கூ­டிய தொடர்­பா­டல்கள், சாது­ரி­ய­மான நெகிழ்­வு­ப்போக்கு, சிறந்த சுற்­றுச்­சூழல் என்­ப­னவே இலங்கை சகல தொடர்­க­ளிலும் வெற்­றி­பெ­று­வ­தற்­கான பிர­தான கார­ணிகள்’’ எனவும் அவர் குறிப்­பிட்டார்.

‘‘இந்த அணி­யினால் இன்னும் அதி­க­மான முன்­னேற்­றத்தை அடை­ய­மு­டியும். நான்கு சிறந்த வீரர்கள் உபா­தைக்­குள்­ளாகி தற்­போது ஓய்­வாக இருக்­கின்­றனர். இவர்கள் அனை­வரும் அணிக்கு திரும்­பி­யதும் பெரிய அணி­க­ளுடன் போட்­டி­யி­டக்­கூ­டி­ய­தாக இருக்கும். எமது நாட்டில் நிறைய ஆற்­றல்கள் மிக்க வீரர்கள் இருக்­கின்­றனர்.

வர்­க­ளுக்கு சரி­யான வாய்ப்­ப­ளிக்­க­வேண்டி இருக்­கின்­றது. சர்­வ­தேச அரங்கில் அதிக விக்­கெட்­களை வீழ்த்­திய வலது கை பந்­து­வீச்­சா­ளரும் (முத்­தையா முர­ளி­தரன்), இடது கை பந்­து­வீச்­சா­ளரும் (ரங்­கன ஹேரத்) நமது நாட்­டி­லேயே உள்­ளனர்’’ என ஹத்­து­ரு­சிங்க மேலும் கூறினார்.

இரு­வகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் போட்­டி­களில் திசர பெரே­ராவின் ஆற்­றலை மெச்­சிய ஹத்­து­ரு­சிங்க, சிரேஷ்ட வீரர் ஜீவன் மெண்­டி­ஸையும் பாராட்டத் தவ­ற­வில்லை.

இதே­வேளை, ‘‘இலங்கை அணி வெற்­றி­பெ­று­வதை வெளி­யி­லி­ருந்து பார்க்க நேரிட்­டமை ஏமாற்­ற­ம­ளிக்­கின்­றது. ஆனால் வீரர்கள் அனை­வரும் துணிச்­ச­லுடன் விளை­யாடி வெற்­றி­பெற்­றமை பாரட்­டத்­தக்­கது. சீடர்­க­ளுடன் மேய்ப்பர் மீண்டும் இணைந்­ததன் பல­னாக சக­ல­து­றை­க­ளிலும் நாங்கள் பிர­கா­சிக்­கின்றோம்’’ என மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர்கள் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­வித்தார்.

மெத்­யூ­ஸுக்குப் பதி­லாக இரு­வகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் போட்­டி­களில் தலை­வ­ராக விளை­யா­டிய டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்­திமால், ‘‘வெற்­றி­க­ளுடன் நாடு திரும்­பி­ய­தை­யிட்டு மகிழ்ச்சி அடை­கின்றேன். ஓர் அணி என்­ப­தை­விட ஒரு குடும்­ப­மா­கவே விளை­யா­டினோம். ஹத்­து­ரு­சிங்­கவின் வருகை எங்­களை வெகு­வாக மாற்­றி­யுள்­ளது.  முன்­னேற்­றப்­பா­தையில் செல்­வ­தற்கு அவர் ஓர் உந்­து­சக்­தி­யாக விளங்கு கின்றார்’’ என்றார்.

1 comment:

Powered by Blogger.