Header Ads



தொண்டமான் பல்டி அடித்தார்


நுவரெலிய மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தைக் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுஜன முன்னணியுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைக்கவுள்ளதாக சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றியின் பின் ஹட்டன் நகரில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுடன் சீ.பீ. ரத்னாயக்கவும் கலந்துக்கொண்டார்.

சுமார் 13 வருடங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த மாபெரும் வெற்றியுடன், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியமைத்து வாக்களித்த அனைத்து மக்களுக்கும் உயர்ந்த சேவையினை வழங்கவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.