ரணிலை விரட்டுவதில், விஜேதாச தீவிரம் - அரசியலமைப்புடன் ஜனாதிபதியின் வீட்டுக்கும் சென்றார்
ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பிரதமர் பதவியை பறிக்கும் நடவடிக்கையில், முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அரசியல் அமைப்பு ரீதியாக ஜனாதிபதியினால் பிரதமரை பதவி நீக்கம் செய்யமுடியும் என்பதை விளக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிக்கு விளக்கமளிக்கும் முயற்சியொன்றை தற்போது மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதற்காக அவர் அரசியலமைப்பு கையேட்டையும் எடுத்துக் கொண்டு ஜனாதிபதியின் வாசஸ்தலத்துக்கு சென்றுள்ளார்.
விஜேதாச ராஜபக்ஷவின் சட்ட வியாக்கியானத்தை அடுத்து தற்போது மீண்டும் சுதந்திரக் கட்சி வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பொன்று முளைவிடத் தொடங்கியுள்ளது.
Post a Comment