Header Ads



நான் சொன்னதை, ரணில் கேட்கவில்லை - இரகசியத்தை போட்டுடைத்த ஜனாதிபதி


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ ஆகியோர் பிழை விட்ட சந்தர்ப்பம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார்.

மஹியங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன் மகேந்திரனையும், நிதியமைச்சராக ரவீ கருணாநாயக்கவையும் நியமிக்க தாம் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனது நண்பர், மகிந்த ராஜபக்ஸவுக்கு, 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எனது கையாள் எழுதிய கடிதம் ஒன்றை கையளித்தேன்.

அதில் ஜனாதிபதி தேர்தலுக்குச் செல்லவேண்டாம் என்று வலியுறுத்தினேன்.

எனினும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. அதன்போது அவர் தோல்வியை தழுவினார்.

அதுபோல் மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன மகேந்திரனை நியமிக்கவேண்டாம் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தினேன்.

அத்துடன், ரவி கருணாநாயக்கவை நிதியமைச்சராக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தேன்.

அவற்றை அவர் பொருட்படுத்தவில்லை. தான் சொன்னதை மகிந்த கேட்கவில்லை. அதனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் தோற்றார்.

தான் சொன்னதை ரணில் கேட்கவில்லை. 

அவர் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி தற்போது மோசடி குறித்த குற்றச்சாட்டில் சிக்குண்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.