Header Ads



விரைவில் மீண்டும், அமைச்சரவை மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு

விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்ந்த அமைச்சுக்களிலும் மாற்றம் செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார். 

இன்றையதினம் ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். 

அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, மக்களுக்கு சேவை செய்வதற்காக நம்மை பலப்படுத்திக் கொள்வதற்கு இதுபோன்ற மாற்றம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்ந்த அமைச்சுக்களிலும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.