Header Ads



பத­வியை எப்படி, தக்­க­வைத்தார் ரணில்..?

நல்­லாட்சி  தேசிய அர­சாங்­கத்தில்  நெருக்­க­டிகள்  ஏற்­பட்­டுள்ள போதிலும்  சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி  தனித்து அர­சாங்­கத்தை அமைக்­கப்­போ­வ­தாக கூறி­வந்த நிலை­யிலும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின்  தலை­வரும் பிர­த­ம­ரு­மான  ரணில் விக்­ர­ம­சிங்க   தனது பிர­தமர் பத­வியை தக்­க­வைத்­துக்­கொண்டார்.    

பிர­தமர் பத­வியில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வியில் நீடிப்­ப­தற்கு ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யி­னதும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யி­னதும் உறுப்­பி­னர்கள் முழு­மை­யான   ஆத­ரவை  வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர்.  தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு   சுதந்­திரக் கட்சி  கடு­மை­யாக  முயற்­சித்­த­போ­திலும்   அந்த முயற்சி இறு­தியில் கைவி­டப்­பட்­டுள்­ளது. 

எனவே ஐக்­கிய தேசி­யக்­கட்சி  தாம் பெரும்­பான்­மை­யுடன் இருப்­ப­தா­கவும்   சுதந்­தி­ரக்­கட்­சியின் பக்­கத்தில் யாருக்­கா­வது பிர­தமர் பத­விக்கு   ஆசை இருந்தால் அவர்   பெரும்­பான்­மையை நிரூ­பிக்­க­வேண்­டி­யது  அவ­சியம் என்றும் கூறி­வ­ரு­கின்­றது. 

எவ்­வா­றெ­னினும் ஐக்­கிய  தேசி­யக்­கட்­சி­யினர் இந்த நிலைமை தொடர்பில்  தொடர்ந்து ஆராய்ந்து வரு­கின்­றனர்.  நேற்று முன்­தி­னமும்   ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­க­ளுடன்   பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். 

மேலும்  தான் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வையும் இணைத்­துக்­கொண்ட  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன்  நடத்­திய பேச்­சு­வார்த்தை தொடர்­பிலும்   எடுத்­து­ரைத்­தி­ருந்தார்.  நல்­லாட்சி அர­சாங்கம் பல­மாக இருக்­கின்­றது என்றும் அது தொடரும் என்றும் பிர­தமர் கூறி­யி­ருந்தார்.  அதா­வது ஜனா­தி­ப­தி­யு­ட­னான இந்த சந்­திப்­பின்­போது  நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை  கொண்­டு­வந்து தனக்­கெ­தி­ராக   பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டால் தான் பதவி வில­கு­வ­தா­கவும்   அதனை விடுத்து  எந்தக் கார­ணத்­திற்­கா­கவும் பதவி விலகப் போவ­தில்லை என்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­த­தாக கூறப்­ப­டு­கின்­றது. 

 கடந்த 10 ஆம் திகதி நடை­பெற்ற  உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் எதிர்­பா­ரா­த­வி­த­மாக   முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­முன வெற்­றி­யீட்­டி­யது.  ஐக்­கிய தேசி­யக்­கட்சி இரண்டாம் இடத்­திற்கும்  சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மூன்றாம் இடத்­திற்கும் தள்­ளப்­பட்­டி­ருந்­தன. தேர்தல் முடி­வு­களை அடுத்து  தேசிய அர­சாங்­கத்தில்  பாரிய நெருக்­கடி நிலை ஏற்­பட்­டது.  குறிப்­பாக  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பதவி வில­கு­மாறு  கோரி­ய­தா­கவும்  அவர் அதனை மறுத்­து­விட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது. 

இதனையடுத்தே ஐக்கிய   தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் தனித்து ஆட்சி  அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தன. எனினும்  தற்போது ஐக்கிய தேசியக்கட்சிக்கு சாதகமான  அரசியல் சூழல்  காணப்படுகின்றது. இந்நிலையில்   பல்வேறு  சர்ச்சைகளுக்கு  பின்னர் தேசிய அரசாங்கம் நீடிக்கின்றது. 

3 comments:

  1. respect the verdict of the people and resign with respect or you will be annihilated in 2020 elections.

    ReplyDelete
  2. 2020 is miles away????????????

    ReplyDelete
  3. Brother Asfar, Your argument is wrong we did not have a parliamentary election at all.

    ReplyDelete

Powered by Blogger.