Header Ads



பல பிரச்சினைகளே, அரசாங்கத்தின் தோல்விக்கு காரணம்

சய்டம் பிரச்சினை உள்ளிட்ட தீர்வு வழங்கப்படாத பல பிரச்சினைகளே அரசாங்கத்தின் தோல்விக்கு காரணம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசெகர கூறியுள்ளார். 

இன்று -22-  கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 

அமைச்சரவையை மாற்றியமைப்பது சம்பந்தமாக நடப்பது என்வென்பது பற்றி முழுமையாக எவருக்கும் தெரியாது என்றும் அவர் கூறினார். 

அது சம்பந்தமான அனைத்து தீர்மானங்களும் ஜனாதிபதியால் எடுக்கப்படுவதாக அவர் கூறினார். 

அதேநேரம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தான் எப்போதுமே கட்சித் தலைவருடனேயே இருந்துள்ளதாகவும், நாளை வேறொரு தலைவர் நியமிக்கப்பட்டால் அவருக்கும் தனது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தயாசிறி ஜயசெகர கூறியுள்ளார்.

1 comment:

  1. Your department and ministry are clean...? No any problems there???
    Greedy

    ReplyDelete

Powered by Blogger.