Header Ads



பிரான்ஸில் இலங்கையர் கொலை, கொலையாளியும் தற்கொலை

பிரான்ஸ் பரிஸ் மொன்பர்னாஸ் பகுதியில் உள்ள உணவகத்திற்குள் இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உணவகத்தில் தொழில் புறியும் 25 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை தொழில் நிமித்தம் உணவகத்திற்கு வந்த மற்றுமோர் ஊழியர் நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த அறையில் கொலை செய்யப்பட்டிருந்த நபரை கண்டதும் பொலிஸாரிடம் அழைப்பினை ஏற்படுத்தி அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாது குறித்த உணவகத்தினை சோதனை நடத்தியதில் உணவகத்தின் பாத்திரங்கள் சிதறி, சண்டை இடம்பெற்றதன் பின்ரே குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதெனத் தெரிவித்துள்ளனர்.

சடலத்தின் அருகில் இன்னொரு உணவக ஊழியரின் ஆடையும் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இளைஞனைக் கொன்றவர் இதே உணவகத்தில் பணிபுரிபவர் என்பதை அறிந்து அந்த நபரை கைது செய்யச் சென்றுள்ளனர்.

ஆனால் 34 வயதான கொலையாளி, ஓல்னே-சூபுவாவில் புகையிரதத்தின் முன்னால் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரும் இலங்கையைச் சேர்ந்தவரா என்பது குறிப்பிடப்படாவிட்டாலும், குறித்த உணவகத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் இலங்கையைச் சேரந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள்இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.