Header Ads



பரபரப்பு நீடிக்கிறது, சூடும் தணியவில்லை

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து தனியாட்சி அமைப்பதற்குரிய முயற்சியில் பிரதான இரு கட்சிகளும் இறங்கியதையடுத்து கொழும்பு அரசியல் களத்தில் தொடர் பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன. இதனால், அரசியல் பிரமுகர்களுக்கு கொழும்பிலேயே முகாமிட்டிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினமும் முக்கியத்துவமிக்க சந்திப்புகள் நடைபெற்றன.

ஐக்கிய தேசியதுக் கட்சி உறுப்பினர்கள் சிறிகொத்தவிலும், சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியின் இல்லத்திலும், மஹிந்த ஆதரவாளர்கள் அவரின் இல்லத்திலும் சந்திப்புகளை நடத்தினர்.

அத்துடன், ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கிடையிலும் நேற்றிரவு விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

இதனால், கொழும்பு அரசியல் களம் நேற்றும் பரபரப்பாகவே காணப்பட்டது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றதையடுத்து தேசிய அரசும் ஆட்டம் கண்டுள்ளது. இதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியை கைவிட்டுவிட்டு தனியாட்சி அமைப்பதற்குரிய முயற்சியில் சுதந்திரக் கட்சி இறங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் அது போர்க்கொடி தூக்கியுள்ளது.

மறுபுறத்தில் பிரதமர் பதவியை தக்கவைப்பதற்குரிய முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளார். கட்சி உறுப்பினர்கள் சிலரே தனக்கு எதிராகச் செயற்படுவதால் கட்சி தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்கவும் அவர் தயார்நிலையிலேயே இருக்கிறார். 

No comments

Powered by Blogger.