Header Ads



பெண் வேட்பாளர் மீது, பாலியல் தொல்லை

உள்ளூராட்சித் தேர்தலில் வெலிக்கந்த பிரதேசத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த ஒருவரை கைது செய்வதற்காக வெலிக்கந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த 2 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக குறித்த வேட்பாளர் முறைப்பாடு செய்ததையடுத்து வெலிகந்த பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு, சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய வெலிக்கந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

1 comment:

Powered by Blogger.