Header Ads



யாழ்ப்பாணத்தில் நிலாமுக்கு ஆதரவான, இறுதி கூட்டத்தில் றிப்கான் பதியுதீன் - பெருமளவு மக்களும் பங்கேற்பு (படங்கள்)


-பாறுக் ஷிஹான்-

யாழ் மாநகரசபை தேர்தலில்  13 ஆம் வட்டாரத்தில்  ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து வேட்பாளராக போட்டியிடும் கே.எம் நிலாமை ஆதரித்து ஊர்வலம் மற்றும்  கூட்டம் ஒன்று இன்று (7) மாலை நடைபெற்ன்றது.

13 ஆம் வட்டாரத்தில் உள்ள ஜே-86 ஜே-87 ஆகிய கிராம சேவகர் பிரிவில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றினைந்து இவ்வூர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ஊர்வலத்தில் வேட்பாளர் கே.எம் நிலாம் மாலைகள் அணிவிக்கப்பட்டு மக்களின் ஆதரவு குரலுடன் கூட்ட மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.

அத்துடன் யாழ் ஐந்து சந்திப்பகுதியில் அமைக்கபட்ட கூட்ட மேடையில் தனது உரையில் வேட்பாளர் கே.எம் நிலாம் கருத்து தெரிவிக்கையில்

இத்தேர்தலானது எமக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும்.  இதனை எமது  உரிமைக்கான தேர்தலாக பார்த்து வாக்களிக்க வேண்டும். இல்லாவிடின்  தற்போது உள்ள  இருப்பதையும் இழந்து நிற்கும் சமூகமாக மாறும் நிலையே ஏற்படும்.

இதன் மூலம்  கடந்த காலங்களில் யாழ் முஸ்லீம்களின்  எஞ்சிய எமது நிலப்பரப்புகளையும் சொத்துக்களையும் பாதுகாப்பது நம்  ஒவ்வொருவரதும் கடமையாகும். எமது எதிர்கால சந்ததிக்கு வழங்கவேண்டிய பாரிய பொறுப்பு எனது தலையின் மீது சுமத்தப்பட்டுள்ளதை உணர்கின்றேன்.

எனவே மக்கள் அதனை தீர்மானிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.






No comments

Powered by Blogger.