Header Ads



என்னை கைது செய்வதற்கு காரணங்களை தேடித் திரிகின்றார்கள் - கோத்தபாய

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் ஊடக அறிக்கையில் மேலும் கூறுகையில்,

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் எனக்குத் தொடர்பு கிடையாது. உண்மைகளை மூடி மறைப்பதற்கும் மக்களை பிழையாக வழிநடத்தவும் முயற்சிக்கப்படுகின்றது.

இதன் ஓர் கட்டமாகவே இந்தக் கொலை தொடர்பில் என் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. என்னை கைது செய்வதற்கு காரணங்களை தேடித் திரிகின்றார்கள்.

ஆளும் கட்சியின் அமைச்சர்களின் கருத்துக்கள் மூலம் இந்த விடயம் தெளிவாகின்றது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.