Header Ads



ரவிக்கு நெருக்கடி முற்றுகிறது - பின் வரிசை யானைகளும் போர்க்கொடி

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை ஐ.தே.கட்சியின் உபதலைவர் பதவியில் இருந்து நீக்கி குறித்த பதவிக்கு சிரேஷ்ட தலைவரொருவரை நியமிக்குமாறு ஐ.தே.கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிடம் மற்றும் நிர்வாக குழுவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கியின் பிணை முறி விசாரணை அறிக்கையின் படி ரவி கருணாநாயக்க கையூட்டல் பெற்றுக்கொண்டுள்ளது தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என தற்போதைய நிலையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, எதிர்வரும் தினத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்புகளில் கலந்து கொள்வது ஐ.தே.கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டி பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, ரவி கருணாநாயக்கவை உடனடியாக கட்சியின் உபதலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.