Header Ads



கால்வாயில் பாய்ந்த கார் - மோட்டார் சைக்கிளில் சென்றவர், குதித்து மூவரைக் காப்பாற்றினார்

(ரெ.கிறிஷ்­ணகாந்)

மகா­வலி – வியானா கால்­வாயில் கார் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னதில் ஒருவர் காணாமல் போயுள்­ள­துடன் மூவர் காப்­பாற்­றப்­பட்­டுள்­ள­தாக மஹி­யங்­க‍‍னை பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

பதுளை – மஹி­யங்­க‍‍னை பிர­தான வீதியில் பண்­டா­ர­வ­ளை­யி­லி­ருந்து மஹி­யங்­கனை நோக்கி பய­ணித்துக் கொண்­டி­ருந்த கார் ஒன்று நேற்­றுக்­காலை 7. 30 மணி­ய­ளவில் மாபா­க­ட­வெவ 17 ஆம் கட்டை பிர­தே­சத்தில் மகா­வலி வியானா கால்­வாயில் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.

அதன்­போது அவ்­வீ­தியால் மோட்டார் சைக்­கிளில் சென்­று­கொண்­டி­ருந்த ஒருவர் கால்­வா­யினுள் குதித்து நீரில் மூழ்­கிய மூவரை பிர­தே­ச­வா­சி­களின் உத­வி­யுடன் காப்­பாற்­றி­யுள்ளார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

விபத்து இடம்­பெற்ற வேளையில் குறித்த காரினுள் திஸ்­ஸ­புர வித்­தி­யா­ல­யத்தில் பணி­யாற்­றி­வரும் ஆசி­ரி­யர்கள் மூவரும், காரின் சார­தி­யான, பிபிலை பிர­தே­சத்­தி­லுள்ள வங்கி ஒன்றில் கட­மை­யாற்­றி­வரும் நப­ரொ­ரு­வரும் இருந்­துள்­ளனர்.

இவர்­களில் வெலி­மடை பிர­தே­சத்தைச் சேர்ந்த நளின் காரி­ய­வசம் என்ற ஆசி­ரியர் ஒரு­வரே இவ்­வாறு நீரில் மூழ்கி காணாமல் போன­வ­ராவார். சம்­ப­வத்தில் உயிர் தப்­பிய கே.டி. இனோகா தில்ருக் ஷி என்ற பண்­டா­ர­வ­ளையைச் சேர்ந்த ஆசி­ரியை காய­ம­டைந்த நிலையில் மஹி­யங்­க‍‍னை ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

மேலும், காரை செலுத்திச் சென்ற வங்கி உத்­தி­யோ­கத்­தரும், அக்­காரில் பய­ணித்த ஆசி­ரி­யர்­களுள் ஒரு­வ­ரான அவ­ரது சகோ­த­ரனும் நீந்­தி­ய­வாறு பிர­தே­ச­வா­சி­களின் உத­வி­யுடன் கரை­சேர்ந்­துள்­ளனர்.

தனது உயி­ரையும் பொருட்­ப­டுத்­தாது கால்­வா­யினுள் பாய்ந்து இவர்­களை காப்­பாற்­றிய நபர் டீ. எம். கெலும் என்ற மீனவர் ஒரு­வ­ரென பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இதே­வேளை, மகா­வலி – வியானா கால்­வாயில் அடிக்­கடி இவ்­வா­றான விபத்­துக்கள் ஏற்­ப­டு­வ­தனால் பொது­மக்­களின் கோரிக்­கைக்கு அமைய மகா­வலி அதி­கா­ர­ச­பைக்கு சொந்­த­மான அவ்­வீ­தியின் 5 கிலோ­மீற்­ற­ருக்கு இரு­ம­ருங்­கிலும் பாது­காப்பு வேலிகள் அமைக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

எனினும், அடிக்­கடி விபத்­துக்கள் ஏற்­படும் வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு சொந்­த­மான வீதியில் இரும்பு பாது­ காப்பு வேலி­களை அமைக்கும் பணிகள் தாம­த­ம­டை­வதால் இவ்­வா­றான விபத்­துகள் இடம்­பெ­று­வ­தாக பிர­தே­ச­வா­சிகள் தெரி­விக்­கின்­றனர்.

மஹி­யங்­கனை பொலிஸார், மாபா­க­ட­வெவ பொலிஸ் பயிற்சி பாட­சா­லையின் உயிர்­காப்பு படை அதி­கா­ரிகள் மற்றும் பிர­தே­ச­வா­சிகள் நீரினுள் வீழ்ந்த காரை கரையேற்றியிருந்தனர்.

இந்­நி­லையில், மஹி­யங்­க‍‍னை உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் உஜித் லிய­ன­கேயின் ஆலோ­ச­னைக்­க­மைய மஹி­யங்­கனை பொலிஸார் மற்றும் பிர­தே­ச­வா­சிகள் ஒன்­றி­ணைந்து காணா­மல்­போன நபரை தேடும் பணி­களில் ஈடுபட்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.