போதைப்பொருளை விழுங்கியபடி, வந்தவர் கைது
பிரேஸில் நாட்டுப் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (17) காலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த பிரேஸில் நாட்டுப் பிரஜை, 45 உறைகளில் கட்டப்பட்டிருந்த 500 கிராம் நிறையுடைய கொக்கைய்ன் போதைப்பொருளை விழுங்கி வைத்திருந்துள்ளாரென, எஸ்-ரே சோதனையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர், விழுங்கியிருந்த மேற்படி கொக்கைய்ன் போதைப்பொருள் வெளியில் எடுக்கப்பட்டதாக, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Post a Comment