Header Ads



கபீரின் வீட்டில் முக்கிய கூட்டம், சஜித்தும் பங்கேற்பு - சதியல்ல எனவும் அறிவிப்பு

ஐ.தே.க பொதுச்செயலாளர் கபீர் ஹாசிம் வீட்டில் முக்கிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளது

இதனை சிலர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான சதியாக சித்தரித்திருந்தனர்.

அவ்வாறானதொரு நிலையில், இதுகுறித்து ஐ.தே.க. பாராளுமன்ற நலீன் பண்டார குறிப்பிட்டதாவது,

நேற்று பொதுச் செயலாளரின் வீட்டில் கலந்துரையாடினாலும் அது சதித்திட்டம் அல்ல. சஜித் பிரேமதாச, ஹர்ஷ டி சில்வா, பொதுச்செயலாளர் மற்றும் சுஜீவ சேனசிங்க, ருவன் விஜேவர்தன, அஜித் பி பெரேரா ஆகியோர் அதில் கலந்துகொண்டாலும் அதனை சிலர் சதித்திட்டமாகக் காண்கின்றனர். 

பிரதமரைப் பாதுகாப்பதற்காக, ஜனாதிபதியை பாதுகாப்பதற்காக அல்லது கட்சியைப் பாதுகாப்பதற்காக நாம் இரவு பகலாக செயற்படவில்லை. இந்தக் கட்சியை சரியான பாதைக்கு கொண்டு செல்வதற்காகவே செயற்படுகின்றோம். நாம் அங்கு கலந்துரையாடியமை தொடர்பில் பிரதமரும் மலிக் சமரவிக்ரமவும் அறிவர்.

No comments

Powered by Blogger.