Header Ads



மைதானத்தில் மயங்கி விழுந்த, 9 வயது மாணவி மரணம்

அவிஸ்ஸாவெல – தெஹியோவிட்ட பௌத்த ஆரம்ப பாடசாலையில் தரம் 4 இல் கல்வி பயின்ற மாணவி ஒருவர் இன்று (28) பாடசாலை மைதானத்தில் மயங்கி விழுந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த 9 வயது மாணவி, சிரட்டைகளைப் பயன்படுத்தி நடக்கும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போதே இவ்வாறு மயங்கி விழுந்துள்ளார்.

மாணவி உடனடியாக அவிஸ்ஸாவெல வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.