Header Ads



85 வயது முதியவர் கொலை


வத்தளை - மாபோலை பிரதேசத்தில் 85 வயதான வயோதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

வயோதிபரின் மகனே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கொலை செய்த நபர் மனநோயாளி எனவும் அவர் கடந்த 10 மாதங்களாக அவர் அங்கொடை மனநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை 3.45 அளவில் உயிரிழந்துள்ளார்.

நாமல் உயன மாபோலை பிரதேசத்தை சேர்ந்த 85 வயதான மொஹமட் ஹனீபா மொஹமட் நிசார் என்ற வயோதிபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் மரணப் பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளன. வத்தளை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.