Header Ads



கணவர்கள் தொழிலுக்கு சென்றபின், சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் கைது

வெலிகம பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகம - ரேலகம பிரதேசத்தில் வீடு ஒன்றில் குறித்த சூதாட்டம் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ள நிலையிலே 8 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 8 பெண்களில் 5 பெண்கள் வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகள் மூலம் அறியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் 17 தொடக்கம் 35 வயதுக்கிடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது கணவர்கள் மீன்பிடி தொழிலுக்கு சென்றதனை தொடர்ந்து அவர்கள் இவ்வாறான விடயங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.