Header Ads



இன்று 7 மணிக்கு, முக்கிய தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போதே குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளில் மக்கள் ஒரு செய்தியை தந்துள்ளார்கள்.

அதாவது, ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்ய நினைப்பவர்கள் எம்முடன் வந்து இணையலாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

இதேநேரம், ஒரு கட்ட பேச்சுவார்த்தையே தற்போது முடிவடைந்துள்ளது. இன்று பிற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இன்று மாலை 7 மணிக்கு கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு எட்டப்படும் என்றும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.

No comments

Powered by Blogger.