Header Ads



62 வேட்பாளர்களின் உறுப்புரிமை, எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகும்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகும் ஆபத்தான நிலையிலில்  இருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர  தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் கொடுத்தல், பலவந்தம் செய்தல், அச்சுறுத்தல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே 62 வேட்பாளர்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இவர்களுக்கெதிராக தண்டனை கடுமையாக அமையலாம். இவர்கள் குற்றவாளிகளென நிரூபிக்கப்பட்டால் இவர்கள் வெற்றி பெற்றாலும்கூட எச்சந்தர்ப்பத்திலும் இவர்களது உறுப்புரிமை நீக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.