Header Ads



5 நாட்களில் 400 பேர் வபாத் - சிரியாவில் ஆசாத் வெறியாட்டம்


சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு கடந்த 5 நாட்களில்  400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவுப் படையினர் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஓர் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவிகளை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் வீழ்ந்து வருகின்றனர்.

இந்த சூழலை சாதகமாக கொண்டு விரைவில் போராளிகளை அழிக்கும் நோக்கில் அரசுத்தரப்பு கூட்டுப்படையினர் கிழக்கு கூத்தா பகுதிகளில் ஓயாது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு கடந்த 5 நாட்களில்  400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஐந்து தினங்களாக அரசு படையினர் நடத்திய தாக்குதலில் சிக்கி இதுவரை 403 பேர்  பலியாகி உள்ளனர். இதில் 95 குழந்தைகளும் அடங்குவர் என தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.