Header Ads



ரணிலுக்கு ஆதரவாக, கையெழுத்து போடாத 3 பேர்


ஐதேக தலைமையகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து சத்தியக்கடதாசிகளில் கையொப்பங்கள் பெறப்பட்டன. இதில், ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்தன தேரர், விஜேதாச ராஜபக்ச மற்றும் சதுர சேனாரத்ன ஆகியோர் தவிர ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்கவும், கரு ஜெயசூரியவும் சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகின்றனர்.

பிரதமரின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும், அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆராயப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.