ஈரானின் 3 போர்க் கப்பல்கள், கொழும்பில் நங்கூரமிட்டன
ஈரான் நாட்டு கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை இன்று -16- வந்தடைந்துள்ளன.
பயண்டர் (Bayandor), நக்டி (Naghd), டொன்ப் (Tonb) என்ற போர் கப்பல்களே இலங்கையை வந்தடைந்துள்ளன.
குறித்த கப்பலில் இலங்கை வந்த ஈரானிய கடற்படை உயர் அதிகாரிகள், இலங்கை கடற்படை உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியுள்ளனர்.
இந்த மூன்று கப்பல்களும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை இலங்கையில் தரித்து நிற்கவுள்ளன.
மேலும், இந்த காலப்பகுதியில் பல்வேறு நிகழ்வுகள் அந்தக் கப்பல்களில் இடம்பெறவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Post a Comment