35 சு.க. எம்.பி.க்கள் சுதந்திரமாக செயற்பட தீர்மானம் - ரணிலை பிரதமராக ஏற்க முடியாதென அறிவிப்பு
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிடைத்த முடிவுகளுக்கு அமைய ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை வகிக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முடியாது எனவும் இதனால், அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீன அணியாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தயாசிறி ஜயசேகர, அமைச்சர் பதவியில் இருந்து விலக, அமைச்சில் இருந்து தனது பொருட்களை அப்புறப்படுத்தி வருவதாக வெளியாகி வரும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்களுடன் எமக்கு எந்த விரோதமும் இல்லை. ரணில் விக்ரமசிங்கவை அப்புறப்படுத்தி விட்டு அமைக்கப்படும் அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள்.
மைத்திரியுடன் இருக்கும் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களின் 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த காரணம் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைய மாட்டார்கள் எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment